கயா ச்ராத்தம்(
(சர்மா சாஸ்திரிகளின் ‘வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து ஒரு பக்கம்)
கயா. இந்த பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே நம்முள் ஒரு பக்தி கலந்த பெருமையுணர்வும், உத்வேகமும் ஏற்படுகின்றது என்றால் மிகையாகாது. தாய், தந்தை மறைந்த பிறகு, வாழ்க்கையில் ஒரு தடவையாவது, கயா சென்று ச்ராத்தாதிகளை செய்வது புத்ரனின் கடமை. கயா ச்ராத்தம் பித்ருகளுக்கு பேரானந்தத்தையும், திருப்தியும் அளிப்பது மட்டுமல்லாமல் ஈடுபடும் கர்த்தாவின் குடும்பத்திற்கும் ச்ரேயஸ் உண்டாகிறது.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
(புத்ரனின் கடமை என்னவென்று சாஸ்த்ரங்கள் கூறும்
போது, தாய்தந்தை சொற்படி நட, அவர்கள் இறந்தபின் அவர்களுக்கு வருஷா வருஷம் குறிப்பிட்ட திதியில் ச்ராத்தம் (ப்ரத்யாப்திகம்) முறையாக செய், கயாவிற்கு சென்று அவர்களுக்கு பிண்ட ப்ரதானம் செய், இந்த மூன்றும் எவன் செய்கின்றானோ அவன்தான் புத்ரன் என்று வலியுறுத்துகின்றன).
இந்த கயை எங்கே இருக்கிறது?
பீகார் மாநிலத்தில் உள்ளது. விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட இன்பத் தேன் பாயும் மது வனத்திலே ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இந்தத் திருத்தலம் இருக்கிறது. இங்கே இறைவன் கதாதரராகத் கொலு வீற்றிருக்கிறார்.
கயா ச்ராத்தம் எனும் பொழுது அதில் என்னவெல்லாம் அடங்கும். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற கேள்வி கனைகளும் ஆர்வமும் நமக்கு ஏற்படுவது இயற்கையே. கயாவில் குறைந்தது, இரண்டு ஹிரண்ய ச்ராத்தம், ஒரு பார்வண ச்ராத்தம் செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட முறையானது தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள முறை. மேலும் சாஸ்த்ரமாக செய்ய நினைப்போருக்கு வேறு விதி உள்ளது. அதற்கு குறைந்தது கயாவில் 6 நாட்களாவது தங்க நேரிடும்.
1. பல்குனி நதி: முதலில் இந்த நதிக்கரைக்குச் சென்று நதி நீரை எடுத்து வந்து கரையிலேயே நமது ஸ்திரீகள் ஹவிஸ் வைக்க வேண்டும். அதற்கு அங்கிருப்பவர்கள் நமக்கு உதவி புரிவார்கள். அந்த அன்னத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து மனைவி 17 பிண்டங்கள் பிடிக்க நதிக்கரையிலேயே சங்கல்ப மந்திரங்களுடன் பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை யதாஸ்தானம் செய்துவிட்டு அந்த பிண்டங்களை அங்கேயே பசுமாட்டிற்கு அளிப்பது மரபு.
2. விஷ்ணு பாதம்: ஞாபகமிருக்கின்றதா இல்லத்தில் நாம் செய்யும் ச்ராத்தத்தில் ....விஷ்ணு பாதாதி சமஸ்த பாதேஷ¨ தத்தம் என்று பிராம்மண போஜன சமயத்தில் வருகின்ற அந்த ச்ரேஷ்டமான விஷ்ணு பாதத்தில்தான் நாம் அடுத்து பிண்டபிரதானம் செய்கின்றோம். பல்குனி நதியில் சமைத்த ஹவிஸின் மீதி பகுதியில் இப்போது 64 பிண்டங்கள் பிடிக்க வேண்டும். சங்கல்ப மந்திரங்களுடன் பிண்ட பிரதானம். பிறகு இந்த பிண்டங்களை நாமே நமது கையால் எங்கு போடுகிறோம் தெரியுமா? நமது பாக்யம்; விஷ்ணு பாதத்தில் நேரிடையாக நாம் இந்த பிண்டங்களை சேர்க்கின்றோம். உடல், மனம் எல்லாம் ஒன்று சேர அப்போது நாம் அடைகின்ற மனதிருப்தி உள்ளதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
3. பார்வண ச்ராத்தம் : விஷ்ணு பாத ஆலயத்தில் மேலே குறிப்பிட்ட காரியங்களை முடித்துக் கொண்டு நாம் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறோம். கயாவில் இந்த மாதிரி வசதியுள்ள இடங்கள் நிறைய உண்டு. நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் கர்நாடக பவன்.
‘கயாவாலி’ ப்ராம்மணர்கள்:
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நாம் செய்யும் ச்ராத்தத்தில் பங்கு பெற்று சாப்பிட வரும் கயாவாலி என்று அழைக்கப்படும் ப்ராம்மணர்கள் அனேகமாக நித்ய போக்தாக்கள் தான். (கயாவில் தினமும் ச்ராத்த போஜனம் சாப்பிடும் தோஷம் இல்லை).
ஆனால் அவர்கள் முகத்தில் காணப்படும் தேஜஸ் இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பார்த்துதான் அனுபவிக்க வேண்டும். ஆகா என்ன தேஜஸ் அவர்கள் முகத்தில்! அங்கு ஹோமத்துடன் கூடிய ச்ராத்தம் நடைபெறும். மொத்தம் 5 பிராம்மணாளை வரித்து ச்ராத்தம். ச்ராத்தம் முடிந்தவுடன் மீண்டும் 64 பிண்டங்களை ஹோமசேஷ அன்னத்தில் பிடிக்க வேண்டும். அதை எங்கு எடுத்துச் செல்ல வேண்டும் தெரியுமா? அக்ஷயவடத்திற்கு!
4. அக்ஷய வடம்: வருஷா வருஷம் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பிராம்மண போஜன நமஸ்கார கட்டத்தில் “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று கூறுவோம் அல்லவா? அந்த அக்ஷய வடத்திற்குதான் நாம் 64 பிண்டங்களை எடுத்துச் செல்லுகிறோம்.
மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும்:
அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம். மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர்.
இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16 பிண்ட பிரதானம் செய்ய வேண்டும்.
(சர்மா சாஸ்திரிகளின் ‘வேதமும் பண்பாடும்’ நூலிலிருந்து ஒரு பக்கம்)
கயா. இந்த பெயரை உச்சரித்த மாத்திரத்திலேயே நம்முள் ஒரு பக்தி கலந்த பெருமையுணர்வும், உத்வேகமும் ஏற்படுகின்றது என்றால் மிகையாகாது. தாய், தந்தை மறைந்த பிறகு, வாழ்க்கையில் ஒரு தடவையாவது, கயா சென்று ச்ராத்தாதிகளை செய்வது புத்ரனின் கடமை. கயா ச்ராத்தம் பித்ருகளுக்கு பேரானந்தத்தையும், திருப்தியும் அளிப்பது மட்டுமல்லாமல் ஈடுபடும் கர்த்தாவின் குடும்பத்திற்கும் ச்ரேயஸ் உண்டாகிறது.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
(புத்ரனின் கடமை என்னவென்று சாஸ்த்ரங்கள் கூறும்
போது, தாய்தந்தை சொற்படி நட, அவர்கள் இறந்தபின் அவர்களுக்கு வருஷா வருஷம் குறிப்பிட்ட திதியில் ச்ராத்தம் (ப்ரத்யாப்திகம்) முறையாக செய், கயாவிற்கு சென்று அவர்களுக்கு பிண்ட ப்ரதானம் செய், இந்த மூன்றும் எவன் செய்கின்றானோ அவன்தான் புத்ரன் என்று வலியுறுத்துகின்றன).
இந்த கயை எங்கே இருக்கிறது?
பீகார் மாநிலத்தில் உள்ளது. விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட இன்பத் தேன் பாயும் மது வனத்திலே ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இந்தத் திருத்தலம் இருக்கிறது. இங்கே இறைவன் கதாதரராகத் கொலு வீற்றிருக்கிறார்.
கயா ச்ராத்தம் எனும் பொழுது அதில் என்னவெல்லாம் அடங்கும். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற கேள்வி கனைகளும் ஆர்வமும் நமக்கு ஏற்படுவது இயற்கையே. கயாவில் குறைந்தது, இரண்டு ஹிரண்ய ச்ராத்தம், ஒரு பார்வண ச்ராத்தம் செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட முறையானது தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள முறை. மேலும் சாஸ்த்ரமாக செய்ய நினைப்போருக்கு வேறு விதி உள்ளது. அதற்கு குறைந்தது கயாவில் 6 நாட்களாவது தங்க நேரிடும்.
1. பல்குனி நதி: முதலில் இந்த நதிக்கரைக்குச் சென்று நதி நீரை எடுத்து வந்து கரையிலேயே நமது ஸ்திரீகள் ஹவிஸ் வைக்க வேண்டும். அதற்கு அங்கிருப்பவர்கள் நமக்கு உதவி புரிவார்கள். அந்த அன்னத்திலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து மனைவி 17 பிண்டங்கள் பிடிக்க நதிக்கரையிலேயே சங்கல்ப மந்திரங்களுடன் பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். பிறகு அவற்றை யதாஸ்தானம் செய்துவிட்டு அந்த பிண்டங்களை அங்கேயே பசுமாட்டிற்கு அளிப்பது மரபு.
2. விஷ்ணு பாதம்: ஞாபகமிருக்கின்றதா இல்லத்தில் நாம் செய்யும் ச்ராத்தத்தில் ....விஷ்ணு பாதாதி சமஸ்த பாதேஷ¨ தத்தம் என்று பிராம்மண போஜன சமயத்தில் வருகின்ற அந்த ச்ரேஷ்டமான விஷ்ணு பாதத்தில்தான் நாம் அடுத்து பிண்டபிரதானம் செய்கின்றோம். பல்குனி நதியில் சமைத்த ஹவிஸின் மீதி பகுதியில் இப்போது 64 பிண்டங்கள் பிடிக்க வேண்டும். சங்கல்ப மந்திரங்களுடன் பிண்ட பிரதானம். பிறகு இந்த பிண்டங்களை நாமே நமது கையால் எங்கு போடுகிறோம் தெரியுமா? நமது பாக்யம்; விஷ்ணு பாதத்தில் நேரிடையாக நாம் இந்த பிண்டங்களை சேர்க்கின்றோம். உடல், மனம் எல்லாம் ஒன்று சேர அப்போது நாம் அடைகின்ற மனதிருப்தி உள்ளதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
3. பார்வண ச்ராத்தம் : விஷ்ணு பாத ஆலயத்தில் மேலே குறிப்பிட்ட காரியங்களை முடித்துக் கொண்டு நாம் தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறோம். கயாவில் இந்த மாதிரி வசதியுள்ள இடங்கள் நிறைய உண்டு. நாங்கள் தங்கிய இடத்தின் பெயர் கர்நாடக பவன்.
‘கயாவாலி’ ப்ராம்மணர்கள்:
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். நாம் செய்யும் ச்ராத்தத்தில் பங்கு பெற்று சாப்பிட வரும் கயாவாலி என்று அழைக்கப்படும் ப்ராம்மணர்கள் அனேகமாக நித்ய போக்தாக்கள் தான். (கயாவில் தினமும் ச்ராத்த போஜனம் சாப்பிடும் தோஷம் இல்லை).
ஆனால் அவர்கள் முகத்தில் காணப்படும் தேஜஸ் இருக்கின்றதே அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. பார்த்துதான் அனுபவிக்க வேண்டும். ஆகா என்ன தேஜஸ் அவர்கள் முகத்தில்! அங்கு ஹோமத்துடன் கூடிய ச்ராத்தம் நடைபெறும். மொத்தம் 5 பிராம்மணாளை வரித்து ச்ராத்தம். ச்ராத்தம் முடிந்தவுடன் மீண்டும் 64 பிண்டங்களை ஹோமசேஷ அன்னத்தில் பிடிக்க வேண்டும். அதை எங்கு எடுத்துச் செல்ல வேண்டும் தெரியுமா? அக்ஷயவடத்திற்கு!
4. அக்ஷய வடம்: வருஷா வருஷம் நாம் செய்யும் ச்ராத்தத்தில் பிராம்மண போஜன நமஸ்கார கட்டத்தில் “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று கூறுவோம் அல்லவா? அந்த அக்ஷய வடத்திற்குதான் நாம் 64 பிண்டங்களை எடுத்துச் செல்லுகிறோம்.
மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும்:
அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம். மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும் 16 பிண்டங்களை வைக்கிறோம். இதற்கு “மாத்ரு ஷோடஸி” என்றும் கூறுவர்.
இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16 பிண்ட பிரதானம் செய்ய வேண்டும்.